கச்சிதமான அக்கனவுக்குள்
ஒரு அழகான கவிதை வரையப்பட்டிருந்தது
ஒரு அழகான கவிதை வரையப்பட்டிருந்தது
இயற்கையின் பச்சை வர்ணங்களற்று
கருப்பு வெள்ளை சித்திரமாகத்தான் இருந்தது
கருப்பு வெள்ளை சித்திரமாகத்தான் இருந்தது
நறுமணம் நிறைந்திருந்ததாகத் தோன்றினாலும்
அவை பூக்களில் பிறந்ததாகத் தோன்றவில்லை
அவை பூக்களில் பிறந்ததாகத் தோன்றவில்லை
உணர்வுகளின் இரைச்சலையும் மீறி
நிசப்த சங்கீதத்தால் இழைக்கப்பட்டிருந்தது
நிசப்த சங்கீதத்தால் இழைக்கப்பட்டிருந்தது
கனவின் செல்லுலாயிட் சித்திரங்களினூடே
உரக்கக் குரைத்துக்கொண்டிருந்த தெருநாயும்
உள்ளுக்குள் தவித்துக்கொண்டிருந்த மனநாயும்
ஒன்றெனவே தோன்றியது
உரக்கக் குரைத்துக்கொண்டிருந்த தெருநாயும்
உள்ளுக்குள் தவித்துக்கொண்டிருந்த மனநாயும்
ஒன்றெனவே தோன்றியது
எந்தவொரு வரியும் வாக்கியமும்
என்றோ படித்த
எங்கேயோ கேட்ட கவிதையாகவோ
கவிதையின் கருவாகவோ இருக்கவில்லை
என்றோ படித்த
எங்கேயோ கேட்ட கவிதையாகவோ
கவிதையின் கருவாகவோ இருக்கவில்லை
ஒற்றை பக்கத்திலெப்படி
ஓராயிரம் நிகழ்வுகளை புதைத்துக் கொள்ளமுடியுமென
கேள்வியெழும்போது
உனதொற்றைப் பார்வை
மனிதனின் அத்தனை உணர்வுகளையும்
பதுக்கிக்கொன்டிருந்தது
ஒப்பிட ஏதுவாயிருந்தது
ஓராயிரம் நிகழ்வுகளை புதைத்துக் கொள்ளமுடியுமென
கேள்வியெழும்போது
உனதொற்றைப் பார்வை
மனிதனின் அத்தனை உணர்வுகளையும்
பதுக்கிக்கொன்டிருந்தது
ஒப்பிட ஏதுவாயிருந்தது
அக்கனவின் சாராம்சமோ, விவரிப்போ
உங்களுக்கு அவசியப்படாது
உங்களுக்கு அவசியப்படாது
ஏனெனில்
எனக்கு அழகாகத் தோன்றுவது
உங்களுக்கும் அப்படி இருக்கவேண்டுமென
அவசியமில்லையே..!
எனக்கு அழகாகத் தோன்றுவது
உங்களுக்கும் அப்படி இருக்கவேண்டுமென
அவசியமில்லையே..!
No comments:
Post a Comment