Sunday 5 May 2013

அவப்பெயர்

மலர் தூவல் கொட்டாரம்
மதி மயக்கும் இளங்காற்று
சுனை நீரின் இடையொரு மான்,
குளிராதோ மனம் காட்சியிலே,
நீ இல்லா பொழுதினிலே
எதையும் ரசிக்க இயலவில்லை.
கண்விழியில் கவிச்சிரிப்பு,
காதுவளை துடிதுடிப்பு,-
முத்துபல் கோர்த்து
இதழ் விரித்து புன்சிரிப்பு,
ஏ பெண்ணே!
எங்கிருந்து வந்தாயடி
என் மனதை பேதலிக்க,
என்னருகில் நீயிருந்தால்
வேறெதுவும் ரசிக்க மனம் இயலுமா?
உனை மட்டுமே ரசிப்பதனால்
எனக்கு ரசனையற்றவன் என்றொரு
அவப்பெயர்.....
சுமன்

No comments:

Post a Comment